அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-26 04:16 GMT

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. இதுவரை 160 பேரை பரிசோதித்ததில் 11 பேருக்கு தொற்று உறுதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அண்ணா பல்கலை., மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு தொடர்கதையாகியுள்ளது சக மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, சென்னை ஐ.ஐ.டி.யில் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் கொரோனா தொற்று பரவியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்