அண்ணா பிறந்தநாள் விழா

நாகையில் தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-09-15 18:45 GMT

நாகையில் தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் தலைமை தாங்கினார். நகர சபை தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். விழாவையொட்டி நாகை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம், ஆஸ்பத்திரி சாலை வழியாக சென்று பாரதி மார்கெட் பகுதியில் உள்ள அண்ணாசிலைக்கு மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். இதை தொடர்ந்து புத்தூர் ரவுண்டானாவில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் நாகூர் நகர செயலாளர் செந்தில்குமார், நகர துணைசெயலளார் சிவா, ஒன்றிய செயலாளர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்