விவசாயியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

Update: 2023-08-24 19:00 GMT

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு அருகே உள்ள பெரியாகவுண்டனூரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் கதவணி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (25), தென்னரசு (32) ஆகிய 2 பேரும் டீக்கடைக்கு குடிபோதையில் வந்தனர். பின்னர் அவர்கள் டீக்கடையில் இருந்த அண்ணாமலையிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சதீஷ், தென்னரசு சேர்ந்து அண்ணாமலையை கல்லால் தாக்கினார்களாம். இதுகுறித்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ், தென்னரசு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்