பரமத்திவேலூர் அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் சரக்கு வாகன உரிமையாளர் கைது

பரமத்திவேலூர் அருகே 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வாகனத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-08-06 22:26 IST

பரமத்திவேலூர் அருகே 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வாகனத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பரமத்திவேலூர்- மோகனூர் சாலையில் உள்ள குப்புச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவது தெரியவந்தது.

இதை தொடர்ந்து வாகனத்தில் 22 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் இருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

உரிமையாளர் கைது

இதுதொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த அதன் உரியைாளர் பாலப்பட்டி இந்திரா நகரை சேர்ந்த தினேஷ்குமார் (வயது3 2) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் ரேஷன் அரிசி எங்கிருந்து வாங்கி வரப்படுகிறது? இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா? என குடிமை பொருள் குற்றபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்