லாரியில் எரிசாராயம் கடத்தியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

Update: 2022-09-23 18:45 GMT

கிருஷ்ணகிரி:

உத்தரபிரதேச மாநிலம் சேண்ட்கபீர் நகர் மாவட்டம் கஜா கிராமத்தை சேர்ந்தவர் ராம்தனி யாதவ் (வயது 40). இவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்மையில் இருந்து புதுச்சேரிக்கு 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை லாரியில் கடத்த முயன்றார். சிங்காரபேட்டை ஜங்சன் அருகே லாரியுடன் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ராம்தனி யாதவை கைது செய்தனர். இவர் மீது சென்னை மாதவரம், விழுப்புரம் வழத்தி போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே எரிசாராயம் கடத்தியதாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் பரிந்துரைத்தார். அவரது பரிந்துரையை ஏற்று, ராம்தனியாதவை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்