பர்கூர்:
பர்கூர் போலீசார் ஜிகினிகொல்லை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் கஞ்சா விற்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் ஒப்பதவாடியை சேர்ந்த மாரியப்பன் (வயது 23) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.