சிக்கன் கேட்டு தாக்கியவர் கைது

சிக்கன் கேட்டு தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-28 17:06 GMT


ராமநாதபுரம் வனசங்கரி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் தியாகராஜன் (வயது40). இவர் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் சிறிய ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு வந்த சேதுபதி நகரை சேர்ந்த சேதுபதி மகன் குணா (21) என்பவர் சிக்கன் கேட்டு தகராறு செய்து தாக்கி உள்ளார். இதுகுறித்து தியாகராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்