ஏரியூர் அருகேமோட்டார் சைக்கிளில் மது கடத்தியவர் கைது

Update: 2023-04-08 19:00 GMT

ஏரியூர்:

ஏரியூர் பெரும்பாலை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்து பதுக்கி வைத்து விற்பதாக பெரும்பாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கொப்பலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் நிறுத்தாமல் வேகமாக சென்றார். ஆனால் போலீசார் சுதாரித்து கொண்டு மோட்டார் சைக்கிளை விரட்டி சென்று பிடித்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் சோதனை செய்ததில் அதில் 60 மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் மது கடத்தி சென்றதாக பெரும்பாலை அருகே உள்ள ஆர்.ஆர்.அள்ளியை சேர்ந்த மாதப்பன் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்