வீட்டில் மது விற்றவர் கைது

Update: 2023-06-13 19:00 GMT

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே உள்ள பழைய இண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ். இவருடைய மகன் தமிழ்செல்வன் (வயது 45). இவர் பழைய இண்டூரில் உள்ள தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக இண்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் தமிழ்ச்செல்வன் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவர் மது பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தமிழ்ச்செல்வனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்