சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது

பொம்மிடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-23 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள ஜாலியூர் காந்தி நகரை சேர்ந்தவர் பொன்னன் (வயது 67). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 21-ந்தேதி 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பொம்மிடி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முதியவரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்