லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

சங்கரன்கோவில் அருகே லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-07-01 00:15 IST

சங்கரன்கோவில்:

தென்காசி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சங்கரன்கோவில் அருகே சேர்ந்தமரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை மறித்து சோதனை செய்த போது, அதில் சுமார் 2 ஆயிரத்து 100 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வேனை ஓட்டி வந்த சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த சுடலை (வயது 54) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லோடு வேன், அரிசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதில் தொடர்புடைய கணேசன், ரேஷன் கடை ஊழியர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்