பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலை போட்டிகள் இன்று நடக்கிறது

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலை போட்டிகள் இன்று நடக்கிறது.

Update: 2023-02-25 19:38 GMT

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் குரலிசை, பரத நாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே, சிலம்பம் போன்ற கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்ட அளவில் 5 முதல் 8 வயது வரையும், 9 முதல் 12 வயது வரையும், 13 முதல் 16 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், பரதநாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை), குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் போட்டிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தங்களது வயது சான்றிதழ் மற்றும் பள்ளி படிப்பு சான்றிதழ்களுடன் வர வேண்டும். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என்று கலெக்டா் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்