தி.மு.க. கவுன்சிலர் மீது தாக்குதல்

தர்மபுரியில் தி.மு.க. கவுன்சிலர் மீது தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-05 16:56 GMT

தர்மபுரி அண்ணா நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 23), 15-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர். இவர் நேற்று முன்தினம் இரவு பென்னாகரம் மெயின் ரோடு மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப் போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் 10 பேர், சவுந்தர்ராஜனை வழிமறித்து தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இது குறித்து அவர் தர்மபுரி டவுன் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னை பென்னாகரம் மெயின் ரோடு மேம்பாலம் அருகே மர்ம நபர்கள் தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பென்னாகரம் மெயின் ரோடு மேம்பாலம் அருகே சவுந்தர்ராஜன் தனக்கு சொந்தமான செப்டி டேங்க் கிளீன் செய்யும் வாகனத்தை நிறுத்தி வைத்து உள்ளார். இது தொடர்பாக இப்பகுதி இளைஞர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கவுன்சிலர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்டாரா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்