மகளிர் சுய உதவிக்குழு தலைவி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு

பட்டுக்கோட்டையில் மகளிர் சுய உதவிக் குழு தலைவி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-03-25 19:15 GMT

பட்டுக்கோட்டையில் மகளிர் சுய உதவிக் குழு தலைவி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மகளிர் குழு தலைவி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆனை விழுந்தான் குளத்தெரு பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவருடைய மனைவி சங்கீதா (வயது37). பூ கட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் மகளிர் சுய உதவிக் குழு தலைவியாக உள்ளார். சுய உதவி குழுவில் சங்கீதா மூலம் அதே பகுதியை சேர்ந்த சரவணன் மனைவி கீதா என்பவரும் பணம் வாங்கி இருந்ததாகவும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக இருவருக்கும் முன்விரதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கீதா தன்னுடைய உறவினர் பரமக்குடி பகுதியை சேர்ந்த அருண் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சங்கீதா வீட்டிற்கு சென்று அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி உள்ளார். அவருடன் வந்த அருண் அரிவாளை எடுத்து சங்கீதாவை கை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டினார்.

2 பேருக்கு வலைவீச்சு

இதை தடுக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மற்றும் அவருடைய மனைவி சாந்தி இருவரையும் அருண் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டாராம்.

இதனை தொடர்ந்து படுகாயம் சங்கீதா, பழனிசாமி, சாந்தி ஆகிய 3 பேரும் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்ைச மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து சங்கீதா பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு அருண், கீதா ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்