மாமனார் மீது சரக்கு வாகனத்தை ஏற்றி கொல்ல முயற்சி

பண்ருட்டி அருகே மாமனார் மீது சரக்கு வாகனத்தை ஏற்றி கொல்ல முயற்சி மருமகன் உள்பட 3 பேர் மீது வழக்கு

Update: 2022-10-17 18:45 GMT

பண்ருட்டி

பண்ருட்டி அடுத்துள்ள துண்டுகாடு, வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் மகள் உஷா. இவரும் அதே ஊரை சேர்ந்த ராமசாமி மகன் மாயவேல் என்பவரும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று கடை தெருவுக்கு சென்ற சேகரை அவரது மருமகன் மாயவேல் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்து மோதி அவரை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் சேகர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். பின்னர் மாயவேல் அவரது நண்பர்கள் கார்த்திகேயன், சிலம்பரசன் ஆகிய 3 பேரும் சேர்ந்து சேகரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயம் அடைந்த சேகர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் மாயவேல் உட்பட 3 பேர் மீதும் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்