ஆத்தூர் சிவன் கோவிலில் சூரிய நமஸ்கார பூஜை
ஆத்தூர் சிவன் கோவிலில் சூரிய நமஸ்கார பூஜை நடந்தது.;
ஆறுமுகநேரி:
ஆத்தூரில் மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், இயற்கை செழிக்கவும் சூரிய நமஸ்கார பூஜை நடைபெற்றது. ஆத்தூர் சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவில் முன்பு நடைபெற்ற இந்த பூஜையில் கணபதி ஹோமமும், தொடர்ந்து துளசி பூஜையும் கலச பூஜையும் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.