ஆட்டோ திருடிய வாலிபர் கைது

ஆறுமுகநேரியில் ஆட்டோ திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-22 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பாரதி நகரை சேர்ந்தவர் நாராயணன் மகன் மணிகண்டன் (வயது 38). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் ஆறுமுகநேரி பஜாரில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் காலையில் மீண்டும் வந்து பார்த்தபோது ஆட்ேடாைவ காணவில்லை. அதை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மணிகண்டன் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்புத்ெதருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் சூரிய பிரகாஷ் (23) என்பவர் ஆட்டோவை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்