விழிப்புணர்வு முகாம்

கடையநல்லூர் நகராட்சியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.;

Update:2022-06-27 00:29 IST

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சி சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு முகாம், மேல கடையநல்லூர் தேரடி பகுதியில் நடந்தது. நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். ஆணையாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பசுமை உரக்குடிலில் தயாரான உரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். சுகாதார அலுவலர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்