விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-08-12 19:38 GMT

பாடாலூர்:

செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஊர்வலம் இளையோர் செஞ்சிலுவை அமைப்பினர் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னுதுரை (பொறுப்பு) தலைமை தாங்கினார். இளையோர் செஞ்சிலுவை சங்க பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் ஜோதிவேல், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் தெய்வானை, லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாடாலூர் தலைமை காவலர் உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து இந்திய செஞ்சிலுவை சங்க கவுரவ செயலாளர் ஜெயராமன், ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளியில் தொடங்கி சார்பதிவாளர் அலுவலகம், தபால் நிலைய அலுவலகம், வங்கிகள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கலாதங்கராசு, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரஞ்சித்குமார் வரவேற்றார். முடிவில் சாரண, சாரணியர் வேப்பூர் கல்வி மாவட்ட செயலாளர் தனபால் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்