சாத்தூரில் எனது குப்பை எனது பொறுப்பு தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் குருசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆணையாளர் இளவரசன் முன்னிலை வகித்தார். இதில் சுகாதார அலுவலர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள் திருப்பதி, சுரேஷ், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.