குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-08-21 20:17 GMT

திருச்சி சுப்பிரமணியபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பிரபு கலந்து கொண்டு, குழந்தைகளின் மீதான வன்முறைகளான குழந்தை திருமணம் தடுப்பு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, கட்டாய கல்வி உரிமை மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அமல்சில்வியா, அங்கன்வாடி பணியாளர்கள் சுப்புலெட்சுமி, செல்வியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்