விழிப்புணர்வு பேரணி

பசுவந்தனை அரசு பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி நடந்தது

Update: 2022-07-20 12:08 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியின் சார்பாக செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பள்ளி மாணவ-மாணவிகள் பேரணி நடந்தது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் நாயகம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பள்ளி மாணவர் ஒருவர் சிலம்பம் ஆடியவாறும், பேண்டு வாத்தியம் இசைத்தவாறும் முன்னால் செல்ல, மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி பசுவந்தனை மெயின் பஜார் வழியாக சென்று பள்ளியை மீண்டும் சென்றடைந்தது. இதில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்