விழிப்புணர்வு பேரணி

சங்கரன்கோவிலில் விழிப்புணர்வு பேரணி நடந்தது

Update: 2023-04-11 19:00 GMT

சங்கரன்கோவில்:

நெல்லை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய சமரச தீர்வு மைய தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது. சார்பு நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி நரசிம்மமூர்த்தி ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர். சங்கரன்கோவில் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இதில் வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்