ஊட்டியில் பாவேந்தர் இலக்கிய பேரவை கூட்டம்
ஊட்டியில் பாவேந்தர் இலக்கிய பேரவை கூட்டம்;
ஊட்டி
பாவேந்தர் இலக்கியப் பேரவை சார்பில் ஒய்.எம்.சி.எ. படிப்பகத்தில் காணிநிலம் என்ற தலைப்பில் கவிஞர் ரமேஸ்ராஜா தலைமையில் பட்டிமன்றம் மற்றும் கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடைபாதையில் குடியிருப்போர் மற்றும் நாடோடிகளின் அவலநிலை நகைச்சுவை உணர்வுடன் விளக்கப்பட்டது. மேலும் இவ்வாறான மக்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிர படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் புலவர் சோலூர் கணேசன், ஜனார்தனன், நீலமலை ஜேபி மற்றும் மலைச்சாரல் கவிஞர்கள் கலந்து கொண்டனர்.