திருத்தணி முருகன் கோவிலில் 45 நாட்களில் ரூ.2.09 கோடி உண்டியல் காணிக்கை
794 கிராம் தங்கமும், 15,128 கிராம் வெள்ளியும் பக்தர்களின் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது.;
திருவள்ளூர்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துகின்றனர். அந்த உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில், திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 45 நாட்களில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 9 லட்சம் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது. மாதந்தோறும் நடைபெறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர்.
இதில், உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 9 லட்சத்து 51 ஆயிரத்து 249 ரூபாய் வசூலாகியுள்ளது. மேலும், 794 கிராம் தங்கமும், 15 ஆயிரத்து 128 கிராம் வெள்ளியும் பக்தர்களின் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.