ராயக்கோட்டையில் பகத்சிங் பிறந்த நாள் விழா

Update: 2022-09-28 18:45 GMT

ராயக்கோட்டை:

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் சுதந்திர போரட்ட தியாகி பகத்சிங்கின் பிறந்த நாள் விழா ராயக்கோட்டையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பஸ் நிலையத்தில் பகத்சிங்கின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக ராயக்கோட்டை இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் கணேசன் தலைமையில், பழங்குடி மக்கள் சங்க மாநில தலைவர் கெம்பன் பெருமன்ற கொடியை ஏற்றினார்.இதில் வட்டார முன்னால் தலைவர் தொட்டன், வெங்கட்டேன், சீனிவாசன், நாராயணன், பரமேஸ்வரன் தனபால், மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்