கடலில் படகுகள் கவிழ்ந்து விபத்து; 2 மீனவர்கள் காயம்

புதுச்சத்திரம் அருகே கடல் சீற்றத்தால் 2 படகுகள் கவிழ்ந்தது. இதில் 2 மீனவர்கள் காயமடைந்தனர்.

Update: 2022-11-13 18:45 GMT

புதுச்சத்திரம், 

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் அடுத்த பேட்டோடை கிராமத்தை சேர்ந்தவர் சிற்றரசன். மீனவர். இவர் தனக்கு சொந்தமான நாட்டு படகில் 3 மீனவர்களுடன் மீன்பிடிக்க நேற்று காலை 7 மணிக்கு கடலுக்கு சென்றார். அங்கு ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, திடீர் கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்தது.

இதில் தலை மற்றும் மார்பு பகுதியில் சிற்றரசனுக்கு காயம் ஏற்பட்டது. இதை பார்த்த சக மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் சிகிச்சைக்காக அவரை பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த மீனவரான மண்ணாங்கட்டி என்பவர் தனக்கு சொந்தமான நாட்டு படகில் மற்றொரு மீனவரான மேகநாதன் என்பவருடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். அப்போது படகு கவிழ்ந்ததில் மேகநாதனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரும் சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்