விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்

கன்னியாகுமரியில் 3-வது நாளாக கடல்நீர்மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.

Update: 2023-10-17 18:45 GMT

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக தொடங்கப்படவில்லை. பின்னர் காலை 10 மணிக்கு கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதைதொடர்ந்து படகு சேவை தொடங்கியதையடுத்து, சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசித்தனர். தொடர்ந்து 3-வது நாளாக படகு போக்குவரத்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் வட்டக்கோட்டைக்கு செல்லும் உல்லாசப்படகும் இயக்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்