ஊத்தங்கரை அருகேரெயில் தண்டவாளத்தில் நகை மதிப்பீட்டாளர் பிணம்கொலையா? போலீசார் விசாரணை

Update: 2023-04-08 19:00 GMT

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே ரெயில் தண்டவாளாத்தில் நகை மதிப்பீட்டாளர் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர்

ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி சுப்பிரமணிய நகர் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் உடல் 2 துண்டுகளாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற ரெயில்வே போலீசார் முதியவரின் உடல் பாகங்களை மீட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த சாமல்பட்டி போலீசாரின் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் ஊத்தங்கரை அக்ரஹாரம் தெருவை சேர்ந்த தசரதன் (வயது 70) என்பது தெரியவந்தது. இவர் ஊத்தங்கரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் தங்க நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என தெரியவந்துள்ளது.

தசரதன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு உடல்கள் 2 துண்டாக வீசப்பட்டதா? என்பது குறித்து ெரயில்வே போலீசார், சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்