சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் - போலீசார் தீவிர சோதனை

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-12-27 14:18 GMT

சென்னை,

சென்னை காமராஜர் சாலையில் உள்ள் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இன்று மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட 30 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியோடு சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  

Tags:    

மேலும் செய்திகள்