காரைக்குடியில் மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-07-17 18:45 GMT

காரைக்குடி, 

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் குருபூஜையொட்டி காரைக்குடி செஞ்சையில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 38 வண்டிகள் கலந்து கொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை கணக்கன்பட்டி சற்குரு வண்டியும், 3-வது பரிசை பூக்கொல்லை ரித்தீஸ்வரன் மற்றும் காரைக்குடி மாரியப்பன் ஆகியோர் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 28 வண்டிகள் கலந்து கொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை அண்ணாநகர் பாலா வண்டியும், 2-வது பரிசை பாலார்பட்டி சின்னமாயி வண்டியும், 3-வது பரிசை தேவகோட்டை சரவணன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை பல்லவராயன்பட்டி இளமாறன் வண்டியும், 2-வது பரிசை கானாடுகாத்தான் சோலையாண்டவர் வண்டியும், 3-வது பரிசை கன்னிசேர்வைபட்டி தன்சுகா வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்