திருவண்ணாமலை: அரசு பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் காயம்

திருவண்ணாமலையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 15 பேர் காயமடைந்தனர்.

Update: 2024-04-14 09:43 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இன்று மதியம் அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி அருகே இருந்த வயலில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 15 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்