விருதுநகரில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து: மாணவர்கள் இருவர் உயிரிழப்பு.!

பேருந்து விபத்தில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2023-10-30 13:57 GMT

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று புதுப்பட்டி நோக்கி சென்றுகொண்டு இருந்தது. வளைவு ஒன்றில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களான நந்தகுமார் மற்றும் பாண்டி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்