கல்லூரி மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை

கல்லூரி மாணவி கடத்தலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-06-07 18:43 GMT

அரியலூர் மாவட்டம் இடங்கண்ணி மேலத்தெருவை சேர்ந்தவர் செல்லபாண்டியன் (வயது 54), கூலி தொழிலாளி. இவரது மகள் செந்தமிழ்செல்வி (18). இவர் ஜெயங்கொண்டம் தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் செவிலியர் பட்டய படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த 6-ந் தேதி மாலை வெளியே சென்று வருவதாக கூறி ெசன்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து செந்தமிழ்செல்வியை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்