இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை

இளம்பெண் கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2022-09-07 23:32 IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மணக்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் இளவரசி (வயது 20). இவர் ஆதார் கார்டு புதுப்பிப்பதற்காக ஜெயங்கொண்டத்திற்கு சென்று விட்டு வருவதாக கூறிச்சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்