மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அரசு ஊழியர் பலி

விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அரசு ஊழியர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-08-08 00:15 IST

கண்டாச்சிபுரம் அடுத்த மடவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல் மகன் ஜானகிராமன் (வயது 29). இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் திண்டிவனத்தில் நடைபெற்ற தனது உறவினர் ஒருவரின் இல்ல விழாவில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கு விழா முடிந்ததும், அதே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் ஆலை கூட்டு சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஜானகிராமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்