ஏரியூர் அருகேசாலை மறியலில் ஈடுபட்ட 12 பேர் மீது வழக்கு

Update: 2023-08-06 19:00 GMT

ஏரியூர்:

ஏரியூர் 7-வது மைல் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்- சுமித்ரா தம்பதியின் 2½ வயது மகன் ரோஷன் நேற்று முன்தினம் கார் மோதியதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தான். இதையடுத்து பிரசாந்த், சுமித்ரா உள்ளிட்ட உறவினர்கள் பென்னாகரம்- மேச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அத்துமீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக ஏழாவது மைல் பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 50), சுந்தரம் (33), சிலம்பரசன் (30), நாகராஜ் (42), தனபாலன் (55), சுப்ரமணி (45), சேகர் (32), மணிகண்டன் (32), மாதையன் (32), செல்வம் (50), பிரசாந்த் (30), சுமித்ரா (26) ஆகிய 12 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்