ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் மோசடி

முகநூல் மூலம் பழகி தனியார் வங்கி காசாளரிடம் ரூ. 1 லட்சத்து 33 ஆயிரம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-05 18:24 GMT

சிவகங்கை, 

முகநூல் மூலம் பழகி தனியார் வங்கி காசாளரிடம் ரூ. 1 லட்சத்து 33 ஆயிரம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரிசுபொருள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் பிரசன்ன வெங்கடேசன் (வயது30). இவர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் காசாளராக பணிபுரிகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு முகநூல் மூலம் வில்லியம் கிறிஸ்டியன் என்பவர் நண்பராக அறிமுகமானார். இருவரும் முகநூலில் பழகி வந்தனர். இந்தநிலையில் பிரசன்ன வெங்கடேசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பரிசு அனுப்பி உள்ளதாக வில்லியம் கிறிஸ்டி யன் தெரிவித்துள்ளார். பின்னர் வில்லியம் கிறிஸ்டியன் தொலைபேசி மூலம் பிரசன்ன வெங்கடேசனை தொடர்பு கொண்டு விமான நிலையத்தில் பரிசு பொருளுக்கு வரி கட்ட சொல்லுகிறார்கள். எனவே உடனடியாக ஒரு லட்சத்து 33 ஆயிரம் அனுப்பும்படி கேட்டுள்ளார்.

விசாரணை

இதை நம்பிய பிரசன்னா வெங்கடேசனும் அவர் கேட்ட தொகையை கடந்த மாதம் 29-ந்் தேதி அனுப்பி உள்ளார். அதன்பின்னர் அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லையாம். இதுகுறித்து அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு கொள்ளவும் முடியவில்லையாம்.

இதைதொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இது குறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமாரிடம் தெரிவித்தார். அவரது உத்திரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்