ஓசூர்:
பேரிகை அருகே பி.சிங்கிரிப்பள்ளியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 32). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை அவருடைய நண்பர் சுனில்குமார் என்பவருக்கு விற்றார். இதனை தொடர்ந்து கடந்த 20-ந் தேதி மாலை அந்த நிலத்தை சமன்படுத்தும் வேலைகளில் ராதாகிருஷ்ணன் உதவி செய்தார். அப்போது அங்கு வந்த அவரது உறவினர்களான ராமன்தொட்டியை சேர்ந்த முனிராஜ் (48), ஆஞ்சப்பா (25), அம்சகிரி (21) மற்றும் மஞ்சுநாத் (32) ஆகிய 4 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராதாகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தகாத வார்த்தைகளில் திட்டி கைகளால் தாக்கினர். மேலும் அங்கிருந்த பொக்லைன் எந்திரத்தையும் சேதப்படுத்தி மிரட்டினர். இதுதொடர்பாக அவர் பேரிகை போலீசில் புகார் செய்ததன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.