மூதாட்டி உள்பட 3 பேர் மீது வழக்கு

Update: 2023-02-28 19:30 GMT

கெங்கவல்லி:-

கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சியில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கூடமலை பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 54) மேலவீதியை சேர்ந்த முருகவேல் (28), பள்ளிக்கூடம் அருகே வசித்து வரும் பானுமதி (62) ஆகிய 3 பேரும் வீட்டில் பதுக்கி வைத்து அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்