தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு ஆய்வு

கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டி தீர்த்தது

Update: 2024-01-12 10:08 GMT

தூத்துக்குடி,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாககடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்ட மழை காரணமாக சாலைகளும், குடியிருப்புகளும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்தன.

இந்த நிலையில் , தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று மத்திய குழு ஆய்வு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்