விருதுநகர் மாவட்டத்திற்கு மத்திய அரசு விருது
இந்திய அரசின் குறு, சிறு & நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் வழங்கப்படும் 2022க்கான விருதுகள் பிரிவின், முதல் பரிசை விருதுநகர் மாவட்டம் பெற்றுள்ளது.
புதுடெல்லி,
இந்திய அரசின் குறு, சிறு & நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் தேசிய MSME விருதுகள்-2022க்கான விருதுகள் பிரிவில், முதல் பரிசை விருதுநகர் மாவட்டம் தட்டிச் சென்றது.
இந்திய அரசின் குறு, சிறு & நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் தேசிய MSME விருதுகள்-2022க்கான விருதுகள் பிரிவில்,112 முன்னேற விழையும் மாவட்டங்களில் முதல் பரிசை விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு, புதுடெல்லியில் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டிக்கு முதல் பரிசிற்கான தேசிய விருதினை வழங்கினார்.