மத்திய அரசின் கல்வி உதவித்தொகை

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறலாம்.

Update: 2023-10-07 18:45 GMT

இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் கல்வி உதவிதொகை திட்டத்தின்கீழ் 29.9.23-ல் நடைபெறவிருந்த எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமர் கல்வி உதவிதொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9, 11-ம் வகுப்பு படிக்கும் 3093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. தற்போது மேற்படி எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டதால் புதிய வழிமுறையின்படி 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள், மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு National Scholar shipPortal (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) அணுகி கல்வி உதவித்தொகையை பெற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்