பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

நெல்லை தச்சநல்லூரில் பெண்ணிடம் மர்மநபர் சங்கிலியை பறித்துச் சென்றார்.

Update: 2023-09-12 19:39 GMT

நெல்லை தச்சநல்லூர் வடக்கு சிதம்பரநகரை சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி மீனா (வயது 59). இவர் நேற்று முன்தினம் தச்சநல்லூர் மெயின்ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், மீனா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதனை அறிந்த மீனா, சங்கிலியை இறுக்க பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். இருந்தபோதும் சங்கிலியின் ஒரு பகுதியான சுமார் 1½ பவுனை மர்மநபர் பறித்து சென்றார்.

இதுகுறித்து தச்சநல்லூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்