அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல்...!

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

Update: 2022-07-11 03:07 GMT

சென்னை,

சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்க உள்ளது. பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வானகரம் நோக்கி பயணித்து வருகிறார்.

இதற்கிடையில், ஓ.பன்ன்னீர் செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி பயணித்து வருகிறார்.

இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

கற்கள், கட்டைகளை கொண்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதில், சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக வந்த பஸ் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதி போர் களம்போல நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்