புத்தூர் ஏரியில் சீமைகருவேல மரங்களை அகற்றும் பணி

புத்தூர் ஏரியில் சீமைகருவேல மரங்களை அகற்றும் பணியை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-21 19:30 GMT

புத்தூர் ஏரியில் சீமைகருவேல மரங்களை அகற்றும் பணியை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.

சீமைகருவேல மரங்கள்

நாமக்கல் மாவட்டத்தின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 'நம்ம நாமக்கல், பசுமை நாமக்கல்' என்ற திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு அரசு துறைகளின் சார்பாக இதுவரை 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் நீர்வளத்துறையின் சார்பில் ஏரிகளில் ஆக்கிரமித்துள்ள சீமைகருவேல மரங்களை முற்றிலும் அகற்றி கரைகளை பலப்படுத்திடவும் நீர் ஆதாரத்தை பெருக்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று திருச்செங்கோடு தாலுகாவில் 311 ஏக்கர் பரப்பளவில் உள்ள புத்தூர் ஏரியில் சீமைகருவேல மரங்களை வேருடன் நவீன எந்திரங்கள் மூலம் அகற்றும் பணியினை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.

தூள் செய்யும் எந்திரம்

இந்த பணிகளின் போது அகற்றப்படும் மரங்கள் வேருடன் தூள் செய்யும் எந்திரம் மூலம் முற்றிலும் தூளாக்கப்படுகிறது. இதன் காரணமாக வேர் பகுதிகளில் இருந்து புதிதாக மரம் முளைக்க வாய்ப்பு இல்லாமல் செய்யப்படுகிறது. இப்பணிகளை தொடர்ந்தும், விரைந்தும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி, தாசில்தார் அப்பன்ராஜ், நம்ம நாமக்கல் பசுமை நாமக்கல் திட்ட தொடர்பு அலுவலர் ராஜேஸ் கண்ணன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்