ரூ.52 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
பரமத்திவேலூரில் இ.நாம் மூலம் ரூ.52 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.;
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் இ.நாம் மூலம் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் 61 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 2 ஆயிரத்து 645 கிலோ தேங்காயை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.25.65-க்கும், குறைந்தபட்சமாக ரூ.18.31-க்கும், சராசரியாக ரூ.25.35-க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.61 ஆயிரத்து 554-க்கு ஏலம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 2 ஆயிரத்து 297 கிலோ தேங்காயை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக தேங்காய் கிலோ ஒன்று ரூ.28.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ.18-க்கும், சராசரியாக ரூ.25.35-க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.52 ஆயிரத்து 166-க்கு ஏலம் நடைபெற்றது. தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.