ரூ.18½ லட்சம் காணிக்கை வசூல்

திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரூ.18½ லட்சம் காணிக்கை வசூல் ஆனது.

Update: 2023-09-27 18:45 GMT

வாணாபுரம்

வாணாபுரத்தை அடுத்த ஆதிதிருவரங்கத்தில் உள்ள ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாத பெருமாள் கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு கடந்த ஜூன் மாதம் உண்டியல்கள் திறந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டன. 3 மாதங்களுக்கு பிறகு காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது. முன்னதாக கள்ளக்குறிச்சி அறநிலையத்துறை உதவி இயக்குனர் சிவாகரன் மேற்பார்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. பின்னர் கோவில் செயல் அலுவலர் பாக்கியராஜ், இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலையில், கோவில் ஊழியர்கள் பிரகாஷ், விமல் உள்பட 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.18½ லட்சத்து 978-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மணலூர்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்