சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி: கல்லூரி மாணவர் கைது

திண்டுக்கல்லில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி மாணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-26 17:06 GMT
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியை சேர்ந்தவர் 18 வயதான கல்லூரி மாணவர். இவர் வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்