கார் மோதி கல்லூரி மாணவர் பலி

பாளையங்கோட்டையில் கார் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2023-01-09 19:34 GMT

நெல்லையில் கார் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

கல்லூரி மாணவர்

நெல்லை பெருமாள்புரம் நீச்சல் குளம் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரின் மகன் மாதேஷ் (வயது 20). இவர் கோவில்பட்டியில் உள்ள நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று இரவு பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி காலனி பள்ளிவாசல் ரோடு சந்திப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

விபத்து

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மாதேஷ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாதேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து கார் டிரைவரான, நெல்லை இட்டேரி பகுதியை சேர்ந்த முத்தையா என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் விபத்தில் உயிரிழந்த மாதேசின் உறவினரான ஜோஸ்லின் அருள்செல்வி தென்காசி மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்